யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(17) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவிலிலிருந்து கொக்குவில் சந்திவரை, கோம்பையன் மணல், சிவப்பிராகாசம் வீதி, தலையாழி, சபாபதி வீதி, பூநாரிச் சந்தி, நந்தாவில், கொக்குவில் சந்தி, ஞானபண்டிதர் வீதி, பிரம்படி, மாவடி, மருத்துவபீடப் பிரதேசம், செல்வமஹால் திருமண மண்டபம், குருநகர், பழைய பூங்கா வீதியின் ஒருபகுதி, பாசையூர், கொய்யாத் தோட்டம், கொழும்புத்துறை வீதி, புங்கன்குளம் வீதி, சுவாமியார் வீதி, வலன்புரம், துண்டி, நெடுங்குளம், மணியந் தோட்டம், உதயபுரம், நாவாந்துறை, பொம்மைவெளி, சூரியவெளி, சோனகத்தெரு, அராலி வீதி, செழியன் வீதி, மீனாட்சிபுரம், வில்லூன்றி, நாவாந்துறை, Ceynor பவுண்டேஷன் லிமிற்ரெட், மாவட்டக் கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம்,குருநகர் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம், Infentas Ice Solutions(Pvt) Ltd, யாழ்ப்பாணம் சிறைச்சாலைத் திணைக்களம், துரையப்பா விளையாட்டங்கு, புனிதநகர், மாதனை, கற்கோவளம் வெளிச்சவீடு, தும்பளை, வறாத்துப்பளை, திகிரி, கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, வலந்தலை, நடுத்தெரு, கசூரினா பீச், கருங்காலி, மருதபுரம், ஆலடி, சிவகாமி அம்மன் கோவிலடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு