மாவை சேனாதிராஜா விரட்டப்பட்டமைக்கு கடும் வருத்தம் வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா

ஆசிரியர் - Admin
மாவை சேனாதிராஜா விரட்டப்பட்டமைக்கு கடும் வருத்தம் வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணத்தில் அண்மையில் மீனவர்கள் நடாத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் அங்கிருந்து விரட்டப்பட்ட சம்பவத்துக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கடும் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை(16) பிற்பகல் யாழிலுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு வருத்தம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர் முன்னரும் ஊர்காவற்துறை நாரந்தனையிலும், முள்ளிவாய்க்காலிலும் பொதுமக்களால் இடையூறுகளுக்குள்ளாகினார். எது எவ்வாறாயினும் மாவை சேனாதிராஜாவுக்கு அவ்வாறு நடந்திருக்கவே கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு