யாழில் இராணுவ பேருந்து மோதியதில் தந்தையும் மகளும் படுகாயம்

ஆசிரியர் - Admin
யாழில் இராணுவ பேருந்து மோதியதில் தந்தையும் மகளும் படுகாயம்

யாழ்.தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற இராணுவபேருந்து மோதி ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை(15) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

தந்தையும் மகளும் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த போது மட்டுவில் கனகம்புளியடிச் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கிய 17 வயதான மாணவி சுயநினைவிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது தந்தையார் தலை மற்றும் காற்பகுதிகளில் கடும் இக்காயங்களுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு