வாக்குவாதம் முற்றியதால் வடமராட்சியில் மூவர் படுகாயம்
வாக்குவாதம் முற்றியதில் வாள்வெட்டுக்கும்,அடிகாயங்களுக்கும் இலக்கான மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். வடமராட்சி தும்பளைப் பகுதியில் வியாழக்கிழமை(14) இரவு இரு தரப்புக்கிடையில் இடப்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றியதில் வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் ஆண்கள் இருவரும், பெண்ணொருவரும் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நேற்றைய தினமும் இருதரப்பினருக்கிடையே தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.