பதின்ம வயது சிறுமியை கர்பவதியாக்கிய 30 வயது இளைஞன் கைது.
தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமியன் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி எட்டு மாதக் கர்பிணியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் வாக்கு மூலத்திற்கமைய இன்று மாலை அதே இடத்தைச் சேர்ந்த சிறுமியின் அயல் வீட்டு இளைஞன் ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்ப்பட்ட 30 வயது இளைஞனை, நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்ப்படுத்த கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.