சமயத் தலைவர்களுக்கு வடக்கு ஆளுநர் வழங்கிய வாக்குறுதி

ஆசிரியர் - Admin
சமயத் தலைவர்களுக்கு வடக்கு ஆளுநர் வழங்கிய வாக்குறுதி

இந்துசமய விவகாரப் பிரதியமைச்சராக இந்து சமயம் சாராது வேறு மதத்தைச் சார்ந்தவரை நியமித்தமைக்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானத் தலைவர் கலாநிதி-ஆறு. திருமுருகன் மற்றும் இந்து மாமன்றத்தின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று வியாழக்கிழமை(14) பிற்பகல் வடக்கு ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்

இதன் பின்னர் உடனடியாக ஜனாதிபதியின் செயலாளரைத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட வடக்கு ஆளுநர் குறித்த விடயம் தொடர்பான வடமாகாண இந்து மக்களின் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தினார்

இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதியமைச்சர் பதவி மஸ்தானிடமிருந்து மாற்றப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் வடக்கு ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் செயலாளரிடம் கலந்துரையாடிய விடயங்களைத் தம்மைச் சந்தித்த மதத் தலைவர்களிடம் வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு