ஊா்காவற்றுறை பனை,தென்னைவள கூட்டுறவு சங்க கிளைக்கு மாற்றிடம் வழங்கப்படும்..

ஆசிரியர் - Editor I
ஊா்காவற்றுறை பனை,தென்னைவள கூட்டுறவு சங்க கிளைக்கு மாற்றிடம் வழங்கப்படும்..

யாழ்.ஊர்காவற்றுறை பனை,தென்னைவள கூட்டுறவு சங்கத்தின் கிளையை மூடுமாறு பிரதேச செயலகம் பணித்திருக்கும் நிலையில், மேற்படி சங்க கிளையை புதிய இடத்தில் ஆரம்பிப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சங்க பிரதிநிதிகளுடன் ஆராய்ந்துள்ளார். 

இந்த கூட்டம் இன்று காலை ஊர்காவற்றுறை பனை,தென்னைவள கூட்டுறவு சங்கத்தில் இ டம்பெற்றது. சுமார் 46 வருடங்களாக மேற்படி பனை,தென்னைவள கூட்டுறவு சங்கத்தின் கி ளை தனியார் கட்டிடம் ஒன்றில் இலாபகரமாக இயங்கிவருகின்றது. இந்நிலையில் மேற்படி

கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு கூறும் பிரதேச செயலகம் மாற்று இடம் ஒன்றை இதுவ ரை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கவனத்திற்கு கொண்டுவரப்ப ட்டது. இதனை சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பி

னர் மாற்று இடம் ஒன்று தொடர்பாக பிரதேச செயலருடன் பேசி தீர்வு பெற்று தருவதாக உ றுதியளித்துள்ளதுடன், எதிர்காலத்தில் கள் விற்பனையை வெற்றிகரமாகவும், நவீன வளர்ச்சிக ளை அடிப்படையாகவும் கொண்டு மேம்படுத்தவேண்டும் எனவும் கேட்டுள் கொண்டார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு