விபத்தில் காயமடைந்தவா் 14 நாட்களின் பின் உயிாிழந்தாா்..
பெரியவிளான் இளவாலையில் கடந்த 01ம் திகதி வீதியோரம் நடந்து சென்ற கால் இயலாதவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த விபத்தில் பெரிய விளானைச் சேர்ந்த தர்மலிங்கம் - மனோகரன் , வயது - 53 என்பவரே உயிரிழந்தவராவார்.
மேற்படி விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
பெரிய விளானில் தனது வீட்டில் இருந்து சகோதரியின் வீட்டிற்கு மாலை 7 மணிக்கு வீதியோரம் சென்ற குறித்த நோயாளி மீது மின் விளக்கு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மோதியதனால் படுகாயமடைந்தார்
அவ்வாறு படுகாயமடைந்தவர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் .
இவ்வாறு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 14 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இறப்புத் தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.