பொது இடத்தில் புகைப் பிடிக்கவேண்டாம் என அறிவுரை கூறிய பொதுச் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் யாழ்.நாவற்குழி படைமுகாமில் பணியாற்றும் சிப்பாய் கைது...

ஆசிரியர் - Editor I
பொது இடத்தில் புகைப் பிடிக்கவேண்டாம் என அறிவுரை கூறிய பொதுச் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் யாழ்.நாவற்குழி படைமுகாமில் பணியாற்றும் சிப்பாய் கைது...

பொது இடத்தில் புகைப்பிடிக்கவேண்டாம். என அறிவுரை வழங்கிய பொதுச்சுகாதார பரிசோதகரை தாக்கிய யாழ்.நாவற்குழி படைமுகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் பொல்பித்திகம நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. சந்தேக நபரான இராணுவ வீரர் (20) யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் உள்ள முகாமில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் (21) பொல்பதிகம நகரில் உள்ள ஹோட்டல்களை சோதனையிட்ட போது, ஹோட்டல் ஒன்றில் குறித்த இராணுவ சிப்பாய் புகை பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு