யாழ்ப்பாணத்தில் மற்றொரு ஆயுதக் குழு? - புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் மற்றொரு ஆயுதக் குழு? - புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை போன்று தனுரொக் என்ற குழு தலைதூக்க முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொக்குவிலில் பொலிஸாரினால் தனுரொக் குழுவில் இருந்து 3 பேர் கைது செய்யப்பட்டதன் பின்னர் இந்த குழுவினர் தொடர்பில் முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கொக்குவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் தனுரொக் குழுவினால் இரு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் காயமடைந்த இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு தொடர்புபட்டவர்கள் ஆவா குழு மற்றும் தனுரொக் குழுவின் உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இரு குழுக்களுக்கும் இடையில் பல முறை மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு