வீடு திரும்பினார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நேற்று மாலை, யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்.
கடந்த 7ஆம் திகதி, திடிரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை தேறியதை அடுத்தே, அவர், நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.