பலத்த காற்றினால் குடாநாட்டில் பல அசௌகாியங்கள்..

ஆசிரியர் - Editor I
பலத்த காற்றினால் குடாநாட்டில் பல அசௌகாியங்கள்..

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று வீசிய பலமான காற்றின் காரணமாக பல இடங்களிலும் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டு மின் தடைகளும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உடுவில் லவ் லேன் பகுதியில் ஓர் பனை முறிந்து உயர் மின் அழுத்த கம்பிகளில் வீழ்ந்தமையினால் அப்பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.்அதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. 

இதேபோன்று வடமராட்சிப் பகுதியிலும் ஓர் பனை முறிந்து வீழ்ந்த்தில் ஓர் மின்கம்பமும் சேதமடைந்த்தோடு மின் தடையும் ஏற்பட்டது. குறித்த மின்தடையும் மாலையில் சீர் செய்யப்பட்டது.

இதேநேரம் நகரின் மத்தியில் பொருத்தப்பட்டிருந்த ஓர் விளம்பரப் பலகை முறிந்து வீழ்ந்த நிலையில் மக்களால் உடனடியாக இ.மி.சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அப்பகுதிக்கான மின் தடை  சீர் செய்யப்பட்டது. 

இதேநேரம் சுன்னாகம் , மல்லாகம் போன்ற பகுதிகளில் வீதியோரம் நின்றிருந்த மரங்களின் கிளைகள் வீழ்ந்தமையினாலும் சிறிது நேரம் மின் தடை ஏற்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு