மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து அட்டகாசம்

ஆசிரியர் - Admin
மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து அட்டகாசம்

யாழ். மானிப்பாயில் இன்று சனிக்கிழமை(08) பட்டப்பகல் வேளையில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலுள்ள குடும்பத்தினரை அச்சுறுத்தும் வகையில் வீட்டுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு மோட்டார்ச் சைக்கிள்களில் வருகை தந்த ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டு வாசல் கதவை அடித்து நொறுக்கியது. அதனைத் தொடர்ந்து வீட்டு முற்றத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியையும், வீட்டு யன்னல் கதவுகளையும் அடித்துச் சேதப்படுத்தி ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மானிப்பாய்ப் பொலிஸார் தீவிர விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு