யாழ். குப்பிளானில் வீட்டு முற்றத்தில் கட்டியிருந்த பசுமாடு அபேஸ்

ஆசிரியர் - Admin
யாழ். குப்பிளானில் வீட்டு முற்றத்தில் கட்டியிருந்த பசுமாடு அபேஸ்

யாழ்.குப்பிளான் தெற்கு வீரமனைப் பகுதியில் வீட்டு முற்றத்தில் கட்டியிருந்த பல ஆயிரம் ரூபா பெறுமதியான பசுமாடொன்று இன்று புதன்கிழமை(06) அதிகாலை திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேய்ச்சலுக்காகக் கட்டிய பசுமாட்டை பசுமாட்டு உரிமையாளரின் உறவினரொருவர் நேற்றுப் பிற்பகல் வீட்டு முற்றத்தில் கொண்டு வந்து கட்டியுள்ளார். இந்நிலையில் வீட்டின் கேற்றை வழமை போன்று பூட்டுப் போட்டுப் பூட்டாமல் சாத்திவிட்டு வீட்டிலிருந்த கணவனும், மனைவியும் உறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை நித்திரையால் துயிலெழுந்து பார்த்த குடும்பப் பெண்மணி பசுமாடு திருட்டுப் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குறித்த திருட்டு இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை அப்பகுதியிலுள்ள குறிஞ்சிக்குமரன் வீதியால் திருடிய பசுமாட்டைக் கொண்டு சென்றமைக்கான தடயங்களும் காணப்படுகின்றன.

இதேவேளை, குப்பிளான் தெற்குப் பகுதியில் அண்மையில் ஒரு வீட்டில் அடுத்தடுத்து இரு மாடுகள் திருட்டுப் போயிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு