தென்பகுதி மீனவா்களை வெளியேற்ற அரசியல்வாதிகளால் முடியாதா? முடியாவிட்டால் கூறுங்கள் நாங்களே வெளியேற்றுகிறோம்..

ஆசிரியர் - Editor I
தென்பகுதி மீனவா்களை வெளியேற்ற அரசியல்வாதிகளால் முடியாதா? முடியாவிட்டால் கூறுங்கள் நாங்களே வெளியேற்றுகிறோம்..

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோம். 

மேற்கண்டவாறு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கூறியுள்ளனர். வடமராட்சி கிழக்கில் அடாத் தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று காலை வடமராட்சி  கிழக்கு மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். 

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலேயே வடமராட்சி கிழக் கு கடற்றொழிலாளர்கள் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், 

வடமராட்சி கிழக்கிலிருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அவர்களால் முடியாவிட்டால் தென்பகுதி மீனவர்களை எப்படி வெளியேற்றுவதென்பது 

எங்களுக்கு தெரியும். நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம். அதற்கும் விடாமல், தாங்களும் தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் மக்கள் போராடுங்கள் என கூறினால்  அரசியல்வாதி கள் எதற்காக இருக்கிறார்கள்? 

அவர்களால் பயன் என்ன? என கேள்வி எழுப்பிய கடற்றொழி லாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் N

பசி தீர்வு கூறப்படும் என கூறப்பட்டது. அதற்கு என்ன நடந்தது? என கேள்வி எழுப்பிய க டற்றொழிலாளர்கள் அட்டை பிடித்தல், சுருக்குவலை பயன்படுத்துதல், றோலர் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழில் செய்தல் போன்றன 

சட்டத்திற்கு மாறான கடற்றொழில் முறை களை தடைசெய்யக்கோரி தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவந்து அதனை நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பின்னர் றோலர் படகு தொழிலை 

உடனடியாக தடைசெய்யவேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிரா ஜாவுடன் இணைந்து கூறுவதுடன், சட்டவிரோத தொழில்களை தடைசெய்ய விடாது தடுத்துக் கொண்டிருக்கி ன்றார்கள். இவர்களிடம் எங்களுடைய கடல்வளத்தை 

பாதுகாக்கும்படி எப்படி கேட்கலாம் என கூறிய கடற்றொழிலாளர்கள் தென்பகுதி மீனவர்களு க்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லை அதனை செய்ய தங்களால் 

இயலாது என்றால் அதனை அவர்கள் வெளிப்படையாக கூறவேண்டும். என கடற்றொழிலாளர்கள் மேலும் கேட்டுள்ளனர். இதன்போது சபையில் வடமாகாணசபை  உறுப்பினர்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல்வாதிகள் 

இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு