யாழ்.அல்லைபிட்டியில் இறந்து அழுகிய நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி கரையொதுங்கியது..
யாழ்.அல்லைப்பிட்டி கடற்கரையில் இறந்து அழுகிய நிலையில் டொல்பின் ஒன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது. இன்றைய தினம் காலை மேற்படி டொல்பினின் உடலை மீனவா்கள் கண்டுபிடித்துள்ளனா்.
இதனை பெருமளவு மக்கள் சென்று பாா்வையிட்டுள்ளதுடன், பலருக்கு அது டொல்பின் என தொியாத நிலையில் அது கடல் பன்றி என கூறியுள்ளனா்.
பின்னா் டொல்பினின் உடல் மிகுதி கரைக்கு எடுக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.