வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு பகுதிகளுக்கு தனியாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..

ஆசிரியர் - Editor I
வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு பகுதிகளுக்கு தனியாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..

யாழ்.வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு பகுதி களை ஒன்றிணைத்து தனியான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக் கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டே மூன்று பிரசேச செயலர் பிரிவையும் உள்ளடக்கியதாக வேலணைப் பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடாத்தப்பட இருக்கின்றது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின்போது  தீவுப் பகுதிகளான நெடுந்தீவு, ஊர்காவற்துறை,வேலனை ஆகி மூன்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் கல்வி,சுகாதாரம், வீதி,மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.

இதில் அங்குள்ள தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து அங்குள்ள பிரச்சனைகள் தேவைகள் அதிகளவில் இருப்பதாகவும் இந்த மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கியதான தனியானதொரு கூட்டத்தைக் நடாத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இணைத்தலைவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக் கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலித்த இணைத் தலைவர்கள் அவ்வாறானதொரு கூட்டத்தை வேலணைப் பிரதேச செயலகத்தில் நடாத்துவதெனவும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு