யாழில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபருக்கு ஏற்பட்ட நிலை

ஆசிரியர் - Admin
யாழில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபருக்கு ஏற்பட்ட நிலை

வீடு புகுந்து திருட முற்பட்ட கொள்ளையனை அப்பிரதேசப் பொதுமக்கள் ஒன்றிணைந்து மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை (02) இரவு யாழ். குருநகர் மடத்தடிப் பகுதியில் இடம்பெற்றது.

குறித்த நபர் முன்னரும் பல்வேறு தடவைகள் வீடு புகுந்து திருடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்றைய தினமும் குறித்த திருடன் வீடு புகுந்து திருட முற்பட்டுள்ளான். 

இதனையடுத்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பல மக்கள் ஒன்றிணைந்து குறித்த கொள்ளையனை மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு