யாழில் கணவருடன் பயணித்த குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

ஆசிரியர் - Admin
யாழில் கணவருடன் பயணித்த குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

சந்தைக்குச் சென்றுவிட்டு மோட்டார்ச் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரைப் பின் தொடர்ந்து சென்ற திருடர்கள் குடும்பப் பெண்மணி அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் நேற்று(31) மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த தம்பதியினர் உணவுத் தேவைகளுக்காக மந்திகைச் சந்தையில் மரக்கறிகளைக் கொள்வனவு செய்த பின்னர் மோட்டார்ச் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த இனம் தெரியாத இருவர் மோட்டார்ச் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற குடும்பப் பெண் தனது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தம்பதியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு