யாழில் பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் ஆளுநரால் வழங்கி வைப்பு
யாழ்.மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் பாடசாலைகளுக்கு வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று வியாழக்கிழமை(31) பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைத்துள்ளார்.
எதிர்வரும் யூன் மாதம்-05 திகதி தேசிய மரநடுகை தினத்தை முன்னிட்டு சுமார் நான்காயிரம் மரக்கன்றுகளை யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாட்டுவதற்கான ஏற்பாடுகளை வடக்கு ஆளுநர் முன்னெடுத்துள்ளார்.
இதற்கமைவாக யாழிலுள்ள பல்வேறு பாடசாலைகளுக்கான மரக்கன்றுகளை அந்தந்தப் பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று வடக்கு ஆளுநர் வழங்கி வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.