சாவகச்சேரியில் சந்தைக்குச் சென்றவருக்கு நேர்ந்த கதி

ஆசிரியர் - Admin
சாவகச்சேரியில் சந்தைக்குச் சென்றவருக்கு நேர்ந்த கதி

துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோட்டார்ச் சைக்கிள் மோதியதில் 40 வயதான குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(31) பிற்பகல் யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் தனது துவிச்சக்கர வண்டியில் பலாப்பழத்தைக் கட்டியவாறு சாவகச்சேரி சந்தையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சாவகச்சேரி உப்புக்கேணிப் பகுதியில் சாவகச்சேரி நகர்ப்பகுதியிலிருந்து வேகமாக வந்த மோட்டார்ச் சைக்கிள் மோதிப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த குடும்பஸ்தரை வீதியால் சென்றவர்கள் மீட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மீசாலை தெற்கைக் சேர்ந்த பெருமாள் மகேஸ்வரன்(வயது-40) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

மோட்டார்ச்சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் மதுபோதையிலிருந்தமையே விபத்துக்கான காரணமெனப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு