குடாநாட்டில் 3150 மில்லியன் ரூபாய் செலவில் 3 பிரதான வீதிகள் புரமைப்பு...

ஆசிரியர் - Editor I
குடாநாட்டில் 3150 மில்லியன் ரூபாய் செலவில் 3 பிரதான வீதிகள் புரமைப்பு...

யாழ்.மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த யாழ்ப்பாணம் -மானிப்பாய் வீதி மற்றும் யாழ்ப்பாணம் -காரைநகர் வீதி மற்றும் குறிகட்டுவான் வீதி ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யா ழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. மேற்படிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்று ம், ஈ.சரவணபவன் ஆகியோர் மேற்படி

வீதிகள் புனரமைப்பு செய்யப்படுமா? புனரமைப்பு செய்யப்படுமாயின் எப்போது செய்யப்படும்? என கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகா ரி ஒருவர் மேற்படி வீதிகள் புனரமைப்புக்கான கேள்விகள் கோரப்பட்டிருக்கும் நிலையில் ஆக ஸ்ட் மாதம் புனரமைப்பு பணிகள் ஆர

ம்பமாகும் என கூறியுள்ளார். இதேவேளை மேற்படி 3 வீதிகளும் மிக நீண்டகாலமாக புனர மைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 3 வீதிகளும் சுமார் 3150 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு