யாழில் பொலிஸாரின் மோட்டார்ச் சைக்கிளுடன் மோதுண்ட முதியவருக்கு நேர்ந்த கதி
யாழ். வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் மோட்டார்ச் சைக்கிளில் மோதிப் படுகாயமடைந்த 65 வயதான முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(28) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த-25 ஆம் திகதி வட்டுக்கோட்டை மாவடிச் சந்தியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை வாங்கி விட்டு வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்த குறித்த முதியவர் பாதாசாரிகள் கடவையால் வீதியைக் கடக்க முற்பட்ட போது வட்டுக் கோட்டைப் பொலிஸாரின் மோட்டார்ச் சைக்கிளுடன் மோதுண்டு படுகாயமடைந்தார்.
இந்நிலையில் குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.