புதிய ரக அலைபேசிக்கு தாயிடம் பணம் இல்லை! 17 வயது மகன் தற்கொலை - யாழில் சம்பவம்!

ஆசிரியர் - Admin
புதிய ரக அலைபேசிக்கு தாயிடம் பணம் இல்லை! 17 வயது மகன் தற்கொலை - யாழில் சம்பவம்!

புதிய ரக அலைபேசியை வாங்குவதற்கு தாயிடம் பணம் கேட்ட மகனுக்கு, தாயார் பணம் வழங்க மறுத்ததால் மகன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.

நீர்வேலி தெற்கை சேர்ந்த கிருஷ்ணலிங்கம் என்ற 17 வயதுடைய கோபு எனும், பாடசாலை மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

குறித்த மாணவன், கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். கடந்த 25 ஆம் திகதி தாயிடம் புதிய ரக அலைபேசி வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். பொருளாதார நிலை காரணமாக தாயார் பணம் இல்லை என கூறியுள்ளார்.

அந்நிலையிலையே மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளான் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நீர்வேலியில் கடந்த இரண்டு மாதத்திற்குள் நீர்வேலி வடக்கு, தெற்கு கரந்தன் வீதியில் அருகருகே வசிக்கும் 3 பேர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு