யாழ்.கொழும்புத்துறை பகுதியில் பத்திரிகை விநியோகஸ்த்தர் மீது வாள்வெட்டு..
யாழில் இருந்து வெளியாகும் காலைகதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) என்பர் மீது இன்று அதிகாலை 4மணியளவில் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
கொழும்புத்துறை துண்டி பகுதியில் இடைமறித்த 10 பேர் கொண்ட குழு குறித்த செல்வராசா இராஜேந்திரன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வாள் வெட்டுக்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.