முல்லைதீவு கொக்குதொடுவாய் அ.த.க பாடசாலை 1 சீ பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I
முல்லைதீவு கொக்குதொடுவாய் அ.த.க பாடசாலை 1 சீ பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது..

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை தரமுயர்த்தலும் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த 22.05.2018 அன்று நடைபெற்றது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 95% இற்கும் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்த இந்த பாடசாலை மாணவர்கள்  தமது உயர் தரத்தை தொடர்வதாக இருந்தால்10 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் சென்றுவரவேண்டிய நிலை காணப்பட்ட நிலையிலும் இது வரை இந்தப்பாடசாலை தரமுயர்த்தப்படாத காரணத்தினால் கொக்குத்தொடுவாய் கிராமத்தை சூழ உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். 

மாணவர்களின் எதிர்கால கற்றல் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை 1C தரத்திற்கு உயர்த்தப்பட்டு முதன் முதலாக அங்கு உயர்தர வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் பாடசாலையின்  அடைவு மட்டத்தை தேசிய ரீதியிலும் மகாண,மாவட்ட,வலய ரீரியிலும் உயர்த்துவதற்காக சிறப்பாக செயற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர். நிகழ்வில் என்னுடன் வடக்கு மாகாணபபை உருப்பினர் ரவிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு