பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்ற இருவர் கைது..
யாழில் பாடசாலை மாணவர்களுக்கு புகையிலை கலக்கப்பட்ட மாவா பாக்கு விற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலுக்கு அண்மையில் உள்ள கராச்சிலிருந்து அரைக் கிலோ மாவாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் நகரத்தை அண்டிய பாடசாலைகளில் மாணவர்களை மையப்படுத்தி மாவா பாக்கு உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்வோரைக் கைது செய்வதற்காக 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் குழு நேற்று நியமிக்கப்பட்டது.