சுன்னாகம் பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் சந்தேகநபர் சித்திரவதை பொலிஸாரின் பிணை யாழ்.மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி

ஆசிரியர் - Admin
சுன்னாகம் பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் சந்தேகநபர் சித்திரவதை பொலிஸாரின் பிணை யாழ்.மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி

சுன்னாகம் பொலிஸ் நிலையத் தில் தடுப்புக் காவலிலிருந்த சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் தண்டனைக் கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாரும் முன் வைத்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம் பர் மாதம் 25 ஆம் திகதி சுன்னா கம் பொலிஸாரால் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் புன் னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எஸ்.சுமணன் முதலாவது சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் விசாரணை க்காக 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மாலை  கிளி நொச்சி, வட்டக்கச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு சுமணன் பொலிஸ் காவலிலிரு ந்து தப்பித்து இரணைமடுக் குளத்தில் பாய் ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸாரால் கிளிநொச்சி நீதவான் மன் றில் அறிக்கையிடப்பட்டது. 

கைது செய்யப்பட்ட ஏனைய 4 சந்தேக நபர்களுக்கு எதிராக பெரும் குற்ற வழக்கு மல்லாகம் நீதவான் மன்றில் பதிவு செய்யப் பட்டு விசாரணைகள் இடம்பெற்றன. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது சந்தேகநபர்களில் இருவர், சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்  னாள் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார உள் ளிட்ட 8 பொலிஸார் மீது சுமணனை சித்திர வதை செய்து கொலை செய்தனர் என்ற குற் றச்சாட்டை முன்வைத்தனர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.ஜூட்சன், “சந்தேகநபர்களின் குற்றச்சாட் டுத் தொடர்பில் பொலிஸாரிடம் விசாரணை களை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரி வினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், சட் டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதவான் அறிவித்தல் வழங்கினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்ட சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதி ராக கொலை குற்றச்சாட்டு வழக்கை கிளி நொச்சி நீதவான் மன்றில் முன்வைத்தனர்.

அத்துடன், சட்டமா அதிபர் திணைக்கள த்தால் பொலிஸ் அதிகாரி சிந்திக்க பண்டார உள்ளிட்ட 8 பொலிஸாருக்கு எதிராக 1994 ஆம் ஆண்டு சித்திரவதைகள் சட்டத்துக்கு அமை வாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் சித்திரவதை வழக்கில் சிந்திக்க பண்டார உள்ளிட்ட 6 பொலிஸாருக்கும்  10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் வெளிநாடொன்றில் வாழ்வதால் 5 பொலி ஸாரே சிறையில் அடைக்கப்பட்டனர்.

5 தண்டனைக் கைதிகளும் யாழ்ப்பா ணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்பு க்கு ஆட்சேபனை தெரிவித்து தமது சட்டத் தரணிகள் ஊடாக கொழும்பு மேன்முறையீ ட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

தமது மேன்முறையீட்டு மனு விசார ணையில் உள்ளதால் அதன் தீர்ப்பு அறிவிக் கப்படும்வரை தம்மை பிணையில் விடுவி க்கக் கோரி அவர்கள் 5 பேரும் யாழ்ப்பா ணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டின் போதான பிணை விண்ணப்பத்தை சீராய்வு மனு ஊடாக முன்வைத்தனர்.

இந்தச் சீராய்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன் னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

சுமணனை கொலை செய்த குற்றச்சாட் டில் தண்டனைக் கைதிகளான மனுதாரர் கள் 5 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிணை வழங்கப்பட்டால் அந்த வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளிட்ட முக்கிய காரணிகளை முன்வைத்து அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் எழுத்துமூல சமர்ப்பண த்தை முன்வைத்தார்.

அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ் செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளு படி செய்து கட்டளை வழங்கினார்.

இதேவேளை, தடுப்புக் காவலிலிருந்த சந் தேகநபரைக் கொலை செய்தனர் என்ற குற் றச்சாட்டில் கிளிநொச்சி நீதவான் நீதிமன் றால் விளக்கமறியல் உத்தரவை எதிர்த்து சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸார் சார்பிலும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஆண்டு பிணை விண்ணப்பம் செய்ய ப்பட்டது. அந்த விண்ணப்பம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.                             

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு