பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது..

யாழ்.புங்கன்குளம் பகுதியில் நடைபெறவிருந்த பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. 

நேற்றய தினம் புங்கன்குளம் ரயில் கடவையில் கடவை காவலாளி இல்லாமையினால் ரயில் வரும்போது கடவை திறந்து காணப்பட்டுள்ளது. 

கடவை திறந்துள்ளதை பார்த்த பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் கடவையை கடக்க முயன்றுள்ளனர். 

இதன்போது ரயில் திடீரென வந்துள்ளது. இதனை அவதானித்த மக்கள் மாணவர்களை கடவை யிலிருந்து அகற்றியதுடன், தாமும் அலறியடித்து ஓடியுள்ளனர். 

இதனால் பாரிய ரயில் விபத்து மற்றும் பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு