யாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: வாள்களால் அச்சுறுத்திக் கொள்ளை

ஆசிரியர் - Admin
யாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: வாள்களால் அச்சுறுத்திக் கொள்ளை

மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த குடும்பப் பெண்ணை இடைமறித்த திருடர்கள் வாள்களைக் காட்டி அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த பெறுமதியான பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ். நல்லூரில் நேற்று(20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நல்லூர் முடமாவடி வீதியால் பயணித்த குறித்த குடும்பப் பெண்ணை மோட்டார்ச் சைக்கிளொன்றில் வருகை தந்த இரு திருடர்கள் இடைமறித்துள்ளனர்.

வாள்களைக் காட்டிக் குறித்த பெண்ணை அச்சுறுத்திய திருடர்கள் அவரை கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுண் தங்கச் சங்கிலியைப் பறித்தெடுத்ததுடன் அவரது மோட்டார்ச் சைக்கிளை நிலத்தில் தள்ளி விழுத்தியும் அட்டகாசம் செய்துள்ளனர்.

இதேவேளை, பட்டப்பகலில் வாள்களைக் காட்டித் திருடர்கள் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு