கரை ஒதுங்கி நின்ற படகிலிருந்து பொருட்களை எடுத்து சென்ற 5 இளைஞர்கள் கைது..
யாழ்.மயிலிட்டி கடற்குதியில் நீண்ட நாட்க ளாக கரை ஒதுங்கி நிற்கும் படகில் இருந்து பொருட்களை எடுத்து சென்றார்கள் என்ற குற்றச்சாட்டில் புத்தூர்- ஆவரங்கால் பகு தியை சேர்ந்த 5 பேரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவ ருவதாவது,
மயிலிட்டிக் கடற்கரையைப் பார்வையிட இளைஞர் குழு சென்றுள்ளது. அந்தக் கடற்பரப்பில் அநாதரவாக நிற்கும் கப்பலையும் சென்று பார்வையிட்டுள்ளனர். கப்பலில் உள்ள ஒரு வகையான பொருள்களை எடுத்து அழுத்திப் பார்த்துள்ளனர்.
அது ஆகாயத்தில் சென்று பிரகாசமாக வெடித்துள்ளது. இதனையடுத்து, அதேபோன்று கப்பலில் காணப்பட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர் குழு சென்றுள்ளது.
இதனைக் கண்ணுற்ற சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸார், முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்களை மடக்கி கைது செய்தனர்.