அரசியல்வாதிகளின் பாராமுகம்.. இராணுவ தளபதிக்கு கடிதம் எழுதிய பெண்..

ஆசிரியர் - Editor I
அரசியல்வாதிகளின் பாராமுகம்.. இராணுவ தளபதிக்கு கடிதம் எழுதிய பெண்..

குழந்தைகள் இல்லாத காரணத்தால் அரசாங்கத்தின் வாழ்வாதார உதவி திட்டங்களில் தொடர்ந்தேச்சையாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக முறையிட்டு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு யாழ். மிருசுவிலில் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மனித நேய வேலை திட்டங்களுக்கு கீழ் அவருக்கு ஒரு வீட்டை கட்டி தருமாறு  இக்கடிதத்தில் கோரி உள்ளார்.

இவர் இக்கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-

- எனது குடும்பம் நானும், எனது கணவருமாக இரு அங்கத்தவர்களை கொண்டது. தற்போது சிறிய கொட்டில் ஒன்றில் வசித்து வருகின்றோம். எனக்கு வயது 38. கணவருக்கு வயது 39. ஏழை விவசாயிகள். ஆனால் குழந்தைகள் எமக்கு இல்லாத காரணத்தால் கடந்த 13 வருடங்களாக அரசாங்கத்தின் எந்த உதவிகளும் எமக்கு தொடர்ந்தேச்சையாக கிடைப்பதே இல்லை. இந்நிலையில் உங்களால் வழங்கப்படுகின்ற உதவி திட்டத்தில் தயை கூர்ந்து எம்மையும் பயனாளியாக இணைத்து எமது காணியில் வீடு ஒன்று கட்டி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன். -

என குறித்த பெண் கடிதம் எழுதியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு