ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் யாழ்.மாணவன்: காரணம் இதுதான்!

ஆசிரியர் - Admin
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் யாழ்.மாணவன்: காரணம் இதுதான்!

யாழ்.வடமராட்சியின் பிரதான கல்லூரிகளில் ஒன்றான பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் மாணவ விடுதியின் மேல்மாடிக் கட்டடத்திலிருந்து மாணவனொருவன் தவறிவிழுந்து படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் வியாழக்கிழமை(17) இரவு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் மாணவ விடுதியின் மேல்மாடிக் கட்டடத்திலிருந்து குறித்த மாணவன் தவறி விழுந்துள்ளார்.

தவறி விழுந்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் செம்பியன்பற்றுப் பகுதியைச் சேர்ந்த திலக்சன் என்ற மாணவரே படுகாயமடைந்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு