ஜமுனா ஏரியில் பிரபல தவில் வித்துவானின் சடலம்!
நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம், இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
யாழ். செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) வயது (66) என்பவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின் தந்தையாரான இவர் கடந்த 17ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார்.
காணாமல்போனவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இன்று காலை இவரது மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதையடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், ஸ்தலத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.