யாழில் கைத்தொலைபேசியில் உரையாடிய இளம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
யாழ். அச்சுவேலியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இளம் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். அச்சுவேலி வைத்தியசாலையில் கடமை புரியும் குறித்த இளம்பெண் நேற்று(16) பிற்பகல் தனது கடமையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இதன் போது இடிமின்னல் தாக்கத்துடன் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனைப் பொருட்படுத்தாது உறவினரொருவருடன் குறித்த பெண் கைத் தொலைபேசியில் உரையாடியவாறு வீதியால் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது..
இதன் போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கத்திற்கு இலக்கான குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் அச்சுவேலி தோப்புப் பகுதியைச் சேர்ந்த எஸ்.செல்வலதா(வயது-25) என்ற இளம் பெண்ணே படுகாயமடைந்தவராவார்.