முன்னாள் போராளிகளுக்கு உதவிய ஜனநாயக போராளிகள் கட்சி..

ஆசிரியர் - Editor I
முன்னாள் போராளிகளுக்கு உதவிய ஜனநாயக போராளிகள் கட்சி..

யுத்தத்தில் ஒரு காலை இழந்த தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரின் குடும்பத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சியால் நேற்று வியாழக்கிழமை வாழ்வாதார சகாய நிதி வழங்கப்பட்டது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தனால் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் வைத்து 50000 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

இம்முன்னாள் போராளி அவருடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கல் உடைக்கும் பணி செய்து வருகின்ற நிலையில் அவரின் கைகள் கன்றித்து காணப்பட்டன.

மேலும் யுத்தத்தில் இரு கால்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவர் அவருடைய பிள்ளை பாடசாலைக்கு செல்வதற்காக சைக்கிள் ஒன்று வழங்குமாறு ஜனநாயக போராளிகள் கட்சியிடம் கோரி இருந்த நிலையில் அவரின் மனைவியிடம் சம்பிரதாயபூர்வமாக சைக்கிள் கையளித்து வைக்கப்பட்டது. 

குறித்த முன்னாள் போராளி கிடுகு பின்னி குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு