இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத்தாக்கல்: -ஜஸ்மின் சூக்கா எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத்தாக்கல்: -ஜஸ்மின் சூக்கா எச்சரிக்கை
இலங்கை அரசு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை தொடர்ச்சியாக தட்டிக் கழிப்புகளை செய்து, பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால் அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீமூனால் அமைக்கப்பட்ட குழுவின் இலங்கை தொடர்பான விவகாரத்திற்கு பொறுப்பாக இருந்த உறுப்பினரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (ஐவுதுP) நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா எச்சரித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர் திருமதி அனந்தி சசிதரனது யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஜஸ்மின் சூக்கா ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு உரையாடியிருந்தார்.

இவ் உரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களால் ஜஸ்மின் சூக்காவிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி ஒரே நாளில் இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் வேறு வழிகளிலும் காணாமல் போனவர்களின் 280 பேரின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் அவர்கள் தொடர்பான விவரங்களையும் (ஐவுதுP) என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொள்ளும் போது மேற்குறிப்பிட்டுள்ள 280 பேர் தொடர்பான தகவல்களில் இருந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும. இவ்விசாரணையின் முக்கியத்துவம் தொடர்பில் hணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு நாம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.

மேலும் மே 18 அன்று இராணுத்திடம் சரனடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இராணுவம் பதிலளிக்க வேண்டும். குறிப்பாக அக் காலப்பகுதியில் கட்டளையிடும் பிரிவில் இருந்த 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் தொடர்பில் குறித்த இராணுவ அதிகாரிகளிடம் காணாமற் போனோர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

காணாமற்போனுருடைய உறவினர்கள் உள்நாட்டிலும் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது விடயங்களையும் பதிவு செய்யவதற்கான பொது நிலையான தளம் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.

மேலும் காணாமற்போனார் தொடர்பான விடயத்தில் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்களே சாட்சியாக உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் காணமற்போன தமது உறவுகள் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகம் அமைய வேண்டும். அவ்வாறு இருந்தாலேயே அவர்கள் அச்சம் இன்றி சாட்சியளிக்க முடியும். உறவுகளின் சாட்சியம் தொடர்பில் நாங்கள் கரிசணையாக இருப்போம் என்றார்.

தொடர்ந்து யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலைியல் தற்போதும்கூட இலங்கை அரசாங்கமானது தொடர்ச்சியாக அவ்வாறனதொரு காணமல் போனவர்கள் இல்லை என மறுத்துவரும் நிலையில் எந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் உறுமொழி வழங்குவீர்கள்? என ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்:-

இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றது. ஆனால் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிறுனங்களின் ஊடாக மக்கள் காணமல் போயுள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தொடர்ச்சியாக அரசாங்கம் இதனை மறுப்பதற்கான சந்தர்பங்கள் கிடையாது. அவ்வாறு மறுத்தாலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள ஆட்கொணர்வு மனுக்களை கவனத்தில் எடுத்தும் அதேபோன்று ஏற்கனவே அமைக்கப்பட்ட காணாமற் போனோர் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பாதிக்கப்பட்டவர்களது சாட்சியங்களையும் விசாரணை செய்தும் அதே போன்று மனித உரிமை ஆணைக்குழுக்களில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை கவனத்தில் எடுத்தும் காணாமற்போனார் தொடர்பாக உண்மையை கண்டறிய வேண்டும்.

எனினும் மேற்படி விடயங்களில் இருந்து காணாமற் போனோர் அலுவலகமானது தவறுமாக இருந்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து அதில் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை முன்னிறுத்தி அதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதன் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான அரசாங்கத்தின் பொறுப்புக்கூலை உறுதிப்டுத்த முடியும் என்று பதிலளித்தார்.

தொடர்ந்தும் நீங்கள் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் மே 18 ஆம் திகதியன்று காணாமற்போனோர் தொடர்பாக முழுமையாக எத்தனை பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்? ஏன்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர்:-

இந்த தருணத்தில் அது தொடர்பான உறுதியான எண்ணிக்கையை என்னால் தர முடியாது. ஏனெனில் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையானது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக கூறப்படுகின்றது. காணாமற்போனோர், இறுதி நேரத்தில் சரணடைந்தவர்கள், இராணுவத்தால் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டடோர் என்ற அடிப்படையில் வெவ்வோறான எண்ணிக்கைகள் கூறப்படுகின்றது. எனவே இவை அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான தரவுத் தளத்தை நிறுவியதன் பின்னரே முழுமையான எண்ணிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதில் கால நீடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் சாட்சிகளாக உள்ளவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறு நீதியை பெற்றுக்கொள்ள முடியும்? என்று தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்.

இப் பிரச்சினைக்கு எல்லோரும் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதனை உடனடியாக மேற்கொள்ள முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சாட்சியாக உள்ளவர்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிடமும் நேர்காணல்களை மேற்கொண்டு அவர்களது பதிவுகளை எழுத்து மூலமமாக ஆவணப்படுத்துவதன் ஊடாக எக்காலத்திலும் அவற்றைப் பயன்படுத்தி நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு