வலி.மேற்குப் பிரதேச சபையில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு மௌன வணக்கம்

ஆசிரியர் - Admin
வலி.மேற்குப் பிரதேச சபையில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு மௌன வணக்கம்

யாழ். வலி மேற்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(15) இரவு இடம்பெற்றது.

வலி.மேற்குப் பிரதேச சபையின் மூன்றாவது கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்-02 மணி முதல் இரவு- 8.45 மணி வரை இடம்பெற்றது.

கூட்டத்தின் நிறைவில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி இந்தச் சபையில் தீபமேற்றி அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா கோரிக்கை முன்வைத்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைந்து மே மாதம்-12 தொடக்கம் மே –18 வரை வலி சுமந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வாரத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களில் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 18 ஆம் திகதியும் முள்ளிவாய்க்காலிலும் மேலும் சிலவிடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

எனவே, படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு இந்தச் சபையிலும் நாம் இன்று அஞ்சலி செலுத்த சபை அனுமதிக்க வேண்டும் என்றார்.

அவரது கோரிக்கையைத் தவிசாளரும், உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். இதனையயடுத்து அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி தீபமேற்றி உணர்வுபூர்வமாக அக வணக்கம் செலுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு