முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீப ஊர்தி பவனி! - வல்வையில் இருந்து ஆரம்பமானது
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுபடுத்தும் தீப ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பமானது.
இந்த ஊர்திப் பவனி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் ஊடாகவும் பயணித்து மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.