படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக சாவகச்சேரியில் நினைவுத் தூபி!

ஆசிரியர் - Admin
படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக சாவகச்சேரியில் நினைவுத் தூபி!

சாவகச்சேரி பொதுச்சந்தையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நினைவாக தூபி ஒன்று அமைக்கப்படவுள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் சாவகச்சேரி சந்தையில் இடம்பெற்றது. 

இதன்போது உரைநிகழ்த்திய உப தவிசாளர் அ.பாலமயூரன் நினைவுத்தூபி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தலைவர் சிவமங்கை இராமநாதனின் கருத்திட்டத்துக்கு அமைவாக சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் நினைவாக தூபி ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்காக பொருத்தமான இடம் ஒன்றை தெரிவு செய்வதற்கு தவிசாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து உரிய அனுமதிகளுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் நினைவுத்தூபி வெகுவிரைவில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு