யாழ்.மாநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்...

யாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். 

நேற்று (14) பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தில் விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபை செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் ஜீன் 5ம் திகதி தேசிய மரம் நடுகை தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ் நகரை அழகுபடுத்தும் நோக்கில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அதற்கு பொருத்தமான இடங்களையும் மரங்களையும் தெரிவு செய்வதற்காக அதிகாரிகள் சகிதம் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் சென்றிருந்தனர். 

இதேவேளை யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் பாடசாலை அதிபர்களை ஆளுநர் செயலகத்திற்கு அழைத்து மரம் நடும் வேலைத்திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தார். பசுமையாக்கும் திட்டத்திற்கு மாணவர்களின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு