யாழில் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

ஆசிரியர் - Admin
யாழில் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தின் மூன்றாம் நாளான இன்று திங்கட்கிழமை(14)பிற்பகல்- 06 மணி முதல் யாழ். சாவகச்சேரி சந்தைப்பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

கடந்த-1991 ம் ஆண்டு யாழ். சாவகச்சேரிப் பொதுச்சந்தை மீது நடாத்தப்பட்ட விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக இந்த நிகழ்வுகள் நடாத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் சாவகச்சேரி நகரபிதா சிவமங்கை இராமநாதன் பிரதான சுடரை ஏற்றி மலர் தூவி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதேச சபைத் தலைவர், நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு மலர் தூவி உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு