அனலைதீவில் ஆசிரியர்கள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு! - மாணவர்கள் நடுத்தெருவில்
யாழ். அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில், ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
பாதுகாப்பின்மை காணப்படுவதால் அவர்கள் வெளியேறியுள்ளனர். இதனால், மாணவா்கள் கல்வி கற்க முடியாத நிலையில், பாடசாலைக்கு வெளியே காத்திருந்தனர்.