கொள்ளையனின் கத்திக் குத்தில் படுகாயமடைந்த முதியவர் மரணம்!

ஆசிரியர் - Admin
கொள்ளையனின் கத்திக் குத்தில் படுகாயமடைந்த முதியவர் மரணம்!

கொள்ளையனை பிடிக்க முற்றபட்ட போது, அவனின் கத்திக் குத்துக்கு இலக்கான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், அங்கிருந்த தம்பதியரைத் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில், கத்திக்குத்துக்கு இலக்கான தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் கணவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு