அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மலசலகூட குழிக்குள் எட்டு ரி 56 ரக துப்பாக்கிகள்!!

ஆசிரியர் - Admin
அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மலசலகூட குழிக்குள் எட்டு ரி 56 ரக துப்பாக்கிகள்!!

அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து எட்டு ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த துப்பாக்கியை மீட்டுள்ளனர். 

கழிப்பறை பாவனைக்கு என வீட்டு உரிமையாளர்கள் குழி தோண்டியுள்ள போதிலும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை. அந்த குழிக்குள் இந்த துப்பாக்கி எவ்வாறு வந்ததென தெரியாது என்று வீட்டு உரிமையாளர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வீட்டில் உள்ளவர்கள் போரின் போது வீட்டை கைவிட்டு சென்றவர்களாகும்.

அவர்கள் கைவிட்டு சென்ற பின்னர் விடுதலை புலிகள் இந்த குழிக்குள் துப்பாக்கிகளை போட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு