குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து மிரட்டி கொள்ளை! - தென்மராட்சியில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
தென்மராட்சி - அறுகுவெளிப் பகுதியில் நேற்று நள்ளிரவு, வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி, தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 2 இலட்சத்து, 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 2 கைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.