யாழ். சாவகச்சேரியில் காரும் மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுவனும், இளைஞனும் படுகாயம்

ஆசிரியர் - Admin
யாழ். சாவகச்சேரியில் காரும் மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுவனும், இளைஞனும் படுகாயம்

யாழ்.சாவகச்சேரியில் இன்று சனிக்கிழமை(12) முற்பகல் காரும் மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் சிறுவனொருவனும், இளைஞரொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் கிருஷ்ணகுமார் நிருஜன் (வயது- 15) மற்றும் சந்திரகுமார் கஜீபன் (வயது-23) ஆகியோரே சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களாவார்.

மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு