காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்த 80 இலட்சம்!!

ஆசிரியர் - Admin
காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்த 80 இலட்சம்!!

காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 49 கிலோ கிராம் கஞ்சா பொதிகளை மீட்டு நேற்று காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 80 இலட்சம் எனத் தெரியவருகிறது. நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கடற்படையினரின் டோறா படகு சுற்று ரோந்தில் ஈடுபட்டிருந்த போது காங்கேசன்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த பொதியினை சோதனை மேற்கொண்ட போது கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் கூறினர். எனினும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு