யாழ். வடமராட்சியின் பல பகுதிகளில் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ். வடமராட்சியின் பல பகுதிகளில் நாளை மின்தடை

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை (11) மின்சாரம் தடைப்படிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ். குடாநாட்டின் மருதங்கேணி, உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், முள்ளியான், தாளையடி ஐஸ் தொழிற்சாலை, நாகர் கோயிலின் ஒரு பகுதி, குடாரப்பு, செம்பியன்பற்று, மாமுனை, தாளையடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு