யாழில் மதுபோதையில் இரு பெண்களை தாக்கியவருக்கு ஏற்பட்டுள்ள நிலை

ஆசிரியர் - Admin
யாழில் மதுபோதையில் இரு பெண்களை தாக்கியவருக்கு ஏற்பட்டுள்ள நிலை

யாழ். கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் மதுபோதையில் இரு பெண்களைத் தாக்கிக் காயப்படுத்திய 22 வயதான இளைஞனை எதிர்வரும்-22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நேற்றைய தினம்(09) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை குறித்த இரு பெண்களுக்கும் மதுபோதையில் குறித்த இளைஞனால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான பெண்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், மற்றைய பெண் பருத்தித்துறை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குறித்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு